செய்திகள்
கோப்புப்படம்

தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 1,179 பேருக்கு கொரோனா

Published On 2021-10-19 13:38 GMT   |   Update On 2021-10-19 13:38 GMT
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றுக்கு 16 பேர் உயிரிழந்த நிலையில் 1,407 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 1,179 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை  26,89,463 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 1,407 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 26,39,209 பேர் குணமடைந்துள்ளனர். இன்று 16 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 35,928 பேர் பலியாகியுள்ளனர்.

இன்று 1,24,849 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் 156 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு 14,326 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Tags:    

Similar News