செய்திகள்
விபத்து பலி

மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து பெண் பலி

Published On 2021-10-26 15:31 GMT   |   Update On 2021-10-26 15:31 GMT
மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவேரிப்பட்டணத்தை அடுத்த மிட்டஅள்ளி எம்.எஸ். நகரை சேர்ந்தவர் முனியம்மாள் (வயது 55). இவருடைய மகன் குமார் (32). இவர்கள் இருவரும் காரிமங்கலத்தில் இருந்து காவேரிப்பட்டணத்துக்கு மோட்டார் சைக்கிளில் வந்தனர். காவேரிப்பட்டணம் பெட்ரோல் பங்க் அருகில் வந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில் காயம் அடைந்த முனியம்மாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் முனியம்மாள் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே இறந்தார். குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News