செய்திகள்
ரேஷன் அரிசி கடத்தலில் மேலும் 2 பேர் கைது
ரேஷன் அரிசி கடத்தலில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் அமானி கொண்டலாம்பட்டி அருகே உள்ள மல்லக்கா நகர் பகுதியில் சிலர் லாரி மூலம் சேலத்தில் இருந்து வெளி மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்த முயன்றனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி தலைமையில் போலீசார் அங்கு சென்றனர். பின்னர் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக சந்தோஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்து 17 டன் ரேஷன் அரிசி மற்றும் லாரி, ஆட்டோ, மொபட்டுகள் என 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தநிலையில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்த சிரஞ்சீவி, குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.