ஆன்மிகம்
சோலைமலை முருகன் கோவிலில் கார்த்திகை பூஜை

சோலைமலை முருகன் கோவிலில் கார்த்திகை பூஜை

Published On 2020-09-09 06:28 GMT   |   Update On 2020-09-09 06:28 GMT
அழகர்கோவில் மலை உச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற 6-ம் படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் நேற்று ஆவணி மாத கார்த்திகை விழாவும், சஷ்டி பூஜைகளும் நடந்தன.
அழகர்கோவில் மலை உச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற 6-ம் படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் நேற்று ஆவணி மாத கார்த்திகை விழாவும், சஷ்டி பூஜைகளும் நடந்தன. இதில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தன.

உற்சவர் மூலவர் சுவாமிக்கும் பூஜைகள் நடந்தன. பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர். அழகர் மலை அடிவாரத்திலிருந்து சோலைமலை முருகன் கோவிலுக்கு செல்ல கட்டண வேன் வசதி செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News