செய்திகள்
கைது

சாமல்பட்டி அருகே பணம் கேட்டு ஹார்டுவேர்ஸ் கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல்- வாலிபர் கைது

Published On 2019-10-16 14:21 GMT   |   Update On 2019-10-16 14:21 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே குடிபோதையில் பணம் கேட்டு ஹார்டுவேர்ஸ் கடை உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி அருகே கரடி கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். வியாபாரியான இவர் அதே பகுதியில் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார்.

இவர் சம்பவத்தன்று கடையை திறக்க வந்தார். அப்போது அங்கு அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சிங்காரவேலன் என்கிற கன்னுக்குட்டி என்பவர் குடிபோதையில் வந்தார். அவர் பெருமாளிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டார். இதில் ஆத்திரமடைந்த அவர் பெருமாளுக்கு கொலை மிரட்டல் விடுத்தார். 

இதுகுறித்து பெருமாள் சாமல்பட்டி போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிங்காரவேலனை கைது செய்தனர்.
Tags:    

Similar News