செய்திகள்
இந்திரா காந்தி நினைவு நாள்- நினைவிடத்தில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி மலரஞ்சலி
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி மலரஞ்சலி செலுத்தினர்.
புதுடெல்லி:
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 36வது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
தனது பாதுகாவலர்களாலேயே சுட்டு கொல்லப்பட்ட அவரது நினைவு தினத்தினை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, இந்திரா காந்தியின் பேத்தியும் காங்கிரஸ் கட்சியின் உத்தர பிரதேச கிழக்கு பகுதி பொது செயலாளருமான பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
கட்சியின் மூத்த தலைவர்களும் இந்திரா காந்தியின் நினைவிடத்தில் மலர்களை தூவி மரியாதை செலுத்தினர்.