உள்ளூர் செய்திகள்
குளச்சலில் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்களுக்கு பயிற்சி
குளச்சலில் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்ட அனைத்து போலீஸ் நிலையங்களிலும் காவல் துறை சார்பில் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் மற்றும் பெண்கள் உதவும் கரங்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குழந்தைகள், பெண்கள் தொடர்பான புகார் மற்றும் குற்ற நடவடிக்கைகளை இந்த அலுவலர்கள் கண்காணித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் குளச்சல் டி.எஸ்.பி.தங்கராமன் மேற்பார்வையில் சப்-டிவிசனுக்குட்பட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்களுக்கான பயிற்சி குளச்சலில் நடந்தது.
இன்ஸ்பெக்டர்கள் அருள் பிரகாஷ், ஜோதி லட்சுமி, சப் - இன்ஸ்பெக்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நோடல் ஒருங்கிணைப்பாளர் கேத்ரின் மேரி, சமூக நலத்துறை அலுவலர்கள் ஜெயலட்சுமி, ரூபா, குழந்தைகள் நல குழுமம் உறுப்பினர் கிளமண்ட் வின்சிலி, வக்கீல் மரிய ஸ்டீபன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
குழந்தைகள், பெண்கள் தொடர்பான புகார்கள் வரும்போது, அதன் மீது எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.