செய்திகள்
தற்கொலை

ஈரோடு அருகே வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2021-10-15 11:37 GMT   |   Update On 2021-10-15 11:37 GMT
ஈரோடு அருகே வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


ஈரோடு பெரியசேமூர், ஈ.பி.பி. நகர், தென்னந்தோப்பு தெருவை சேர்ந்தவர் செந்தில் (வயது 39). இவரது மனைவி நந்தினி. செந்திலுக்கு கடன் பிரச்சனை இருந்து வந்தது. இதன் காரணமாக கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே செந்தில் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மருத்துவமனையில் அனுமதித்து உறவினர்கள் காப்பாற்றி விட்டனர். இருப்பினும் செந்திலால் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் தான் வாழ்வதைவிட இறந்து விடுவதே மேல் என்று கூறி வந்துள்ளார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த செந்தில் தற்கொலை செய்ய முடிவு எடுத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே செந்தில் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News