செய்திகள்
போடி அருகே யானை மிதித்து கணவன் கண் முன்னே மனைவி மரணம்
போடி அருகே யானை மிதித்து கணவன் கண் முன்னே மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலசொக்கநாதபுரம்:
இடுக்கி மாவட்டம் மூணாறைச் சேர்ந்தவர் குமார் (வயது 40). இவரது மனைவி விஜி (36). இவர்கள் 2 பேரும் எஸ்டேட்டில் கூலி வேலை பார்த்து வருகின்றனர். கரூரில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்துக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் மூணாறில் இருந்து போடி மெட்டுக்கு வந்தனர். அங்கு பைக்கை நிறுத்தி விட்டு பஸ் மூலம் திருமணத்துக்கு சென்றனர்.
மீண்டும் இன்று போடிக்கு வந்து விட்டு சொந்த ஊர் செல்வதற்காக பைக்கில் மூணாறு நோக்கி சென்று கொண்டு இருந்தனர். பூப்பாறை மூலத்துறை அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென அவ்வழியே வந்த யானை இவர்களை மறித்தது.
கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் வந்த பைக்கை எட்டி உதைத்த யானை விஜியை மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.
பின்னர் அவ்வழியே வந்தவர்கள் யானையை அங்கிருந்து விரட்டினர். அதன் பிறகு படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த குமாரை மீட்டு போடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இடுக்கி மாவட்டம் மூணாறைச் சேர்ந்தவர் குமார் (வயது 40). இவரது மனைவி விஜி (36). இவர்கள் 2 பேரும் எஸ்டேட்டில் கூலி வேலை பார்த்து வருகின்றனர். கரூரில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்துக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் மூணாறில் இருந்து போடி மெட்டுக்கு வந்தனர். அங்கு பைக்கை நிறுத்தி விட்டு பஸ் மூலம் திருமணத்துக்கு சென்றனர்.
மீண்டும் இன்று போடிக்கு வந்து விட்டு சொந்த ஊர் செல்வதற்காக பைக்கில் மூணாறு நோக்கி சென்று கொண்டு இருந்தனர். பூப்பாறை மூலத்துறை அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென அவ்வழியே வந்த யானை இவர்களை மறித்தது.
கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் வந்த பைக்கை எட்டி உதைத்த யானை விஜியை மிதித்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.
பின்னர் அவ்வழியே வந்தவர்கள் யானையை அங்கிருந்து விரட்டினர். அதன் பிறகு படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த குமாரை மீட்டு போடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.