ஆட்டோமொபைல்
ஹீரோ எலெக்ட்ரிக்

விற்பனையில் புது மைல்கல் எட்டிய ஹீரோ எலெக்ட்ரிக்

Published On 2021-11-03 10:00 GMT   |   Update On 2021-11-03 10:00 GMT
ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தையில் புது மைல்கல் எட்டியதாக அறிவித்து இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய சந்தை விற்பனையில் 50 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளது. தற்போதைய நிதியாண்டில் கடும் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து இது சாத்தியமானது என ஹீரோ எலெக்ட்ரிக் தெரிவித்து உள்ளது.

இதன் மூலம் 2022 நிதியாண்டு இறுதியில் சந்தையில் கணிசமான பங்குகளை பெற முடியும் என ஹீரோ எலெக்ட்ரிக் நம்பிக்கை தெரிவித்தது. ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ஆப்டிமா மற்றும் என்.வை.எக்ஸ். மாடல்கள் அதிக யூனிட்கள் விற்பனையாகி இருக்கின்றன. 



அடுத்த ஐந்து ஆண்டுகளில் பத்து லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்ய ஹீரோ எலெக்ட்ரிக் இலக்கு நிர்ணயித்து உள்ளது. இதற்காக ஹீரோ எலெக்ட்ரிக் 300 புதிய விற்பனை டச் பாயிண்ட்களை திறக்க திட்டமிட்டுள்ளது.
Tags:    

Similar News