செய்திகள்
பள்ளி மாணவிகள்

1 முதல் 8-ம் வகுப்பு வரை புதுவையில் பள்ளிகள் நவ.8-ந்தேதி திறப்பு?

Published On 2021-10-15 09:48 GMT   |   Update On 2021-10-15 09:48 GMT
புதுவையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
புதுச்சேரி:

புதுவையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது.

வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. பொதுத்தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.

கடந்த ஆகஸ்டு மாதம் முதல் தொற்று குறைந்ததால் செப்டம்பர் 1-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது. 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தடுப்பூசி, விழிப்புணர்வு காரணமாக புதுவையில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது.

தமிழகத்தில் வருகிற நவம்பர் 1-ந் தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

புதுவையை பொறுத்தவரை தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றி வருகின்றனர். இதனால் புதுவையில் பள்ளிகள் திறப்பது குறித்து அமைச்சர் நமச்சிவாயம், கல்வித்துறை செயலாளர் அசோக்குமார், இயக்குனர் ருத்ரகவுடு ஆகியோருடன் தனது அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

புதுவையில் பள்ளிகளை திறக்க வேண்டிய அவசியம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதே நேரத்தில் நவம்பர் முதல் வாரத்தில் புதுவை விடுதலை நாள், கல்லறை திருநாள், தீபாவளி பண்டிகை அடுத்தடுத்து வருவதால் நவம்பர் 8-ந் தேதி (திங்கட்கிழமை) பள்ளிகளை திறக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. பள்ளிகள் திறப்புக்காக கொரோனா வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட உள்ளது.

இதைத் தொடர்ந்து பள்ளிகள் திறப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
Tags:    

Similar News