ஆன்மிகம்
மதுரை எஸ்.எஸ். காலனி பகுதி விநாயகர் கோவில் முன்பு முருகப்பெருமானின் வேல் வைத்து அதற்கு சிறப்பு அபிஷேகம், பூஜை செய்து வழிபட்டனர்.
மதுரை எஸ்.எஸ். காலனி பகுதி விநாயகர் கோவில் முன்பு முருகப்பெருமானின் வேல் வைத்து அதற்கு சிறப்பு அபிஷேகம், பூஜை செய்து வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் இந்து ஆலய பாதுகாப்பு குழு அமைப்பாளர் சுவாமி சதா சிவானந்தா மற்றும் இந்து ஆலய பாதுகாப்பு குழு, மேற்கு மாவட்ட துணைத்தலைவர் மதிவாணன் ஆகியோர் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியுடன் பங்கேற்று விளக்கேற்றி கந்த சஷ்டி கவசம் படித்து முருகனை வழிபட்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். மேலும் கந்த சஷ்டி கவசத்தை பற்றி அவதூறு பரப்பியவர்களை கண்டித்து கோஷம் எழுப்பினர்.