செய்திகள்
ஜே.இ.இ. மெயின் தேர்வு

ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு

Published On 2021-09-15 00:12 GMT   |   Update On 2021-09-15 00:12 GMT
ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகள் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டன.
புதுடெல்லி:

நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு ஜே.இ.இ. மெயின் தேர்வு மற்றும் அட்வான்ஸ்டு தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டுள்ளது. இதன்படி, தேர்வு எழுதியவர்களில் 44 பேர் 100 சதவீதம் மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.

இதேபோல், 18 பேர் முதல் இடம் பிடித்துள்ளனர். அவர்களில் ஆந்திர பிரதேசத்தில் இருந்து 4 பேர், ராஜஸ்தானில் இருந்து 3 பேர், தெலுங்கானா மற்றும் உத்தர பிரதேசத்தில் இருந்து தலா 2 பேர் என மொத்தம் 18 பேர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
Tags:    

Similar News