செய்திகள்
பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக இடம்பெறும் கூட்டணியே ஆட்சியமைக்கும் - பிரேமலதா விஜயகாந்த்

Published On 2021-01-10 13:14 GMT   |   Update On 2021-01-10 13:14 GMT
தேமுதிக இடம்பெறும் கூட்டணியே ஆட்சியமைக்கும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை:

தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், திருப்பூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

தமிழக சட்டசபை தேர்தலில் 41 தொகுதிகளை கொடுக்கும் கட்சியுடனே கூட்டணி என்பது தேமுதிகவின் நிலைப்பாடு. தேமுதிக எந்த கூட்டணியில் உள்ளதோ அந்தக் கூட்டணி தான் ஆட்சியமைக்கும்.

2011ல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம், இதுவரை அதிமுக ஆட்சியே தொடர்கிறது என்றார்.

முன்னதாக பேசிய விஜயபிரபாகரன், கூட்டணி அமைத்தாலும் தனித்து போட்டியிட்டாலும் தேமுதிக இலக்கை அடைந்தே தீரும் என்று கூறினார்.
Tags:    

Similar News