உள்ளூர் செய்திகள்
வீட்டின் முன்பு நின்ற மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற மர்மநபர்
வீட்டின் முன்பு நின்ற மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற மர்மநபரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர்.
பெருந்துறை:
வீட்டின் முன்பு நின்ற மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற மர்மநபரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர்.
பெருந்துறை அடுத்துள்ள காஞ்சிகோவில் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமிகவுண்டர். இவரது மனைவி செல்லம்மாள் (75).
சம்பவத்தன்று செல்லம்மாள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஒரு மர்மநபர் அங்கு வந்து திடீரென செல்லம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க தாலிக்கொடியை பிடித்து பறிக்க முயன்றுள்ளார்.
உடனே சுதாரித்துக்கொண்ட செல்லம்மாள் தாலிக்கொடியை கெட்டியாக சேலையுடன் சேர்த்து பிடித்துக்கொண்டு சத்தம் போட்டார். அப்போது வீட்டிற்குள் இருந்த பேரன் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
இதனைக்கண்ட அந்த மர்மநபர் உடனடியாக தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு வேகமாக தப்பிச் சென்று விட்டார்.
பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை துரத்தியும் அவரை பிடிக்க முடியவில்லை. இது குறித்து செல்லம்மாள் காஞ்சிக்கோவில் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.