செய்திகள்
கைது

தூத்துக்குடியில் மனைவியை கொன்ற பெயிண்டர் கைது

Published On 2020-12-03 05:09 GMT   |   Update On 2020-12-03 05:09 GMT
தூத்துக்குடியில் மனைவியின் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொன்ற பெயிண்டரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி முத்தையாபுரம் தவசிப்பெருமாள் ரோடு பகுதியில் வசித்தவர் கருப்பசாமி (வயது 45). பெயிண்டரான இவர் சண்முகலட்சுமி (40) என்பவரை 4-வதாக திருமணம் செய்தார். சண்முகலட்சுமிக்கு கருப்பசாமி 2-வது கணவர் ஆவர். இந்த நிலையில் கடந்த 29-9-2020 அன்று கருப்பசாமி தனது மனைவி சண்முகலட்சுமியின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்து விட்டு தலைமறைவானார்.

இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சண்முகலட்சுமியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கருப்பசாமி கொலை செய்தது தெரிய வந்தது.

தலைமறைவான அவரை பிடிப்பதற்காக போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் பகுதியில் பதுங்கி இருந்த கருப்பசாமியை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவரை தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News