செய்திகள்
காரைக்குடியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி

காரைக்குடியில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2020-11-22 12:49 GMT   |   Update On 2020-11-22 12:49 GMT
காரைக்குடி ஐந்துவிளக்கு அருகே அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
காரைக்குடி:

காரைக்குடி ஐந்துவிளக்கு அருகே அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஏ.ஐ.டி.யு.சி. மாநில துணைச்செயலாளர் பி.எல்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் மாங்குடி, தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட நிர்வாகிகள் திருநாவுக்கரசு, மலையரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில் மத்திய அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்துவதை கண்டித்தும், வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை கண்டித்தும், 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக மாற்ற கோரியும், அதற்கு சம்பளமாக ரூ.500- ஆக உயர்த்த கோரியும், இந்த திட்டத்தை நகராட்சி பகுதிக்கு விரிவுப்படுத்த கோரியும், வெங்காயம், பெட்ரோல் விலையை கட்டுப்படுத்த கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

இதில் சி.ஐ.டி.யு. சார்பில் தட்சிணாமூர்த்தி, ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் மூர்த்தி, ஐ.என்.டி.யு.சி. சார்பில் ரமேஷ், காங்கிரஸ் தொழிற்சங்கம் சார்பில் புஷ்பராஜ், ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் சண்முகம், கண்ணன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News