செய்திகள்
மரணம்

மாட்டு கொட்டகையின் மேற்கூைரயில் இருந்துதவறி விழுந்த கட்டிட மேஸ்திரி பலி

Published On 2021-01-13 06:11 GMT   |   Update On 2021-01-13 06:11 GMT
மாட்டு கொட்டகையின் மேற்கூைரயில் இருந்துதவறி விழுந்த கட்டிட மேஸ்திரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:

தர்மபுரியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 49), கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் உள்ள மாட்டு கொட்டகையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது மாட்டு கொட்டகையின் மேற்கூரையில் சிமெண்டு அட்டையை மாற்றிய போது திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அந்த பகுதியில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது தொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News