செய்திகள்
உம்மன் சாண்டி

கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டியின் கார் விபத்தில் சிக்கியது

Published On 2021-02-20 04:12 GMT   |   Update On 2021-02-20 04:12 GMT
கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டியின் கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் அவர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினார்.
திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி உம்மன்சாண்டி. இவர் நேற்று தனது காரில் திருவனந்தபுரத்தில் இருந்து கோட்டயத்துக்கு சென்றார்.

பத்தினம்திட்டா மாவட்டம் அடூர் அருகே வடக்கத்து காவு பகுதியில் பகல் 2.15 மணியளவில் அவரது கார் வந்துகொண்டிருந்தது. அப்போது அவரது கார் மீது, எதிரே வந்த மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் இரு கார்களின் முன் பகுதி சேதமடைந்தன.

இந்த விபத்தில் உம்மன்சாண்டி காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினார். அவரது காரின் மீது மோதிய மற்றொரு காரில் இருந்த 3 பேரும் காயமடைந்தனர். அவர்களை உம்மன்சாண்டி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். பின்பு உம்மன்சாண்டி மற்றொரு காரில் கோட்டயத்துக்கு புறப்பட்டு சென்றார்.

உம்மன்சாண்டி கார் மீது மோதிய காரை பெண் ஒருவர் ஓட்டி வந்திருக்கிறார். அந்த கார் பழுதாகி, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி உம்மன்சாண்டியின் கார் மீது மோதியிருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

Tags:    

Similar News