செய்திகள்
தற்கொலை

கடலூரில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை

Published On 2021-01-13 01:54 GMT   |   Update On 2021-01-13 01:54 GMT
கடலூரில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:

கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்தவர் பிரகாஷ். சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நித்யா(வயது 30). இந்த தம்பதிக்கு விஜய் தண்டபாணி (1) என்ற மகன் மற்றும் ஒரு மாத பெண் குழந்தை இருந்தது. பிரசவத்திற்கு வந்ததில் இருந்தே நித்யா எஸ்.என்.சாவடியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் இருந்தார்.

நேற்று மாலை வீட்டில் நித்யா தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது இரு குழந்தைகளும் தரையில் இறந்து கிடந்தன. நித்யா தனது குழந்தைகளை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அவரது இந்த விபரீத முடிவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News