வழிபாடு
திருப்பதி கோவிலுக்கு வைர, மாணிக்க கற்கள் பதிக்கப்பட்ட தங்கக்கைகள் காணிக்கை

திருப்பதி கோவிலுக்கு வைர, மாணிக்க கற்கள் பதிக்கப்பட்ட தங்கக்கைகள் காணிக்கை

Published On 2021-12-11 03:50 GMT   |   Update On 2021-12-11 03:50 GMT
திருப்பதி ஏழுமலையானுக்கு 5.3 கிலோ எடையில் வைரம் மற்றும் மாணிக்க கற்கள் பதிக்கப்பட்டு ரூ.3 கோடியில் தங்கத்தால் தயாரிக்கப்பட்ட கைகளை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கினார்.
திருமலை

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 5.3 கிலோ எடையில் வைரம் மற்றும் மாணிக்க கற்கள் பதிக்கப்பட்டு ரூ.3 கோடியில் தங்கத்தால் தயாரிக்கப்பட்ட கைகளை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கினார்.

அதை, கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் பக்தரிடம் இருந்து திருமலை-திருப்பதி தேவஸ்தான கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பெற்றுக் கொண்டார். பின்னர் அந்தப் பக்தருக்கு கோவிலில் சாமி தரிசன ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வைத்தனர்.
Tags:    

Similar News