செய்திகள்
தற்கொலை

சிவகாசி அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

Published On 2021-03-03 14:43 GMT   |   Update On 2021-03-03 14:43 GMT
சிவகாசி அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:

திண்டுக்கல்லை சேர்ந்த யோகமுத்து என்பவரின் மகள் திவ்யகுசீலி (வயது 23) என்பவருக்கும், சுக்கிரவார்பட்டியை சேர்ந்த ராஜபாண்டி என்பவருக்கும் காதல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக மனமுடைந்த இளம்பெண் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது தந்தை யோகமுத்து திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் முடிந்து 3 ஆண்டுகளில் இளம்பெண் இறந்து இருப்பதால் இதுகுறித்து சிவகாசி சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News