செய்திகள்
திருட்டு

நம்பியாற்றில் குளிக்க சென்ற போது வாலிபரின் மோட்டார் சைக்கிள் திருட்டு

Published On 2021-09-17 10:11 GMT   |   Update On 2021-09-17 10:11 GMT
நம்பியாற்றில் குளிக்க சென்ற போது வாலிபரின் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

திருவள்ளூர் மாவட்டம் காமராஜ்நகரை சேர்ந்தவர் அய்யாத்துரை (வயது 24). இவர் கோவில் கொடை விழாவிற்காக கடந்த 15-ந் தேதி நெல்லை மாவட்டம் களக்காட்டிற்கு வந்தார்.

இந்நிலையில் மாவடி அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நம்பியாற்றில் அய்யாத்துரை குளிக்க சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News