வழிபாடு
புருஷா மிருக வாகனத்தில் எழுந்தருளிய சோமஸ்கந்தர்

பிரம்மோற்சவ விழா: புருஷா மிருக வாகனத்தில் எழுந்தருளிய சோமஸ்கந்தர்

Published On 2022-03-03 05:35 GMT   |   Update On 2022-03-03 05:35 GMT
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் பிரம்மோற்சவ விழாவின் 9-வது நாளில் புருஷா மிருக வாகனத்தில் சோமஸ்கந்தமூர்த்தி, காமாட்சி தாயார் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியில் இருந்து நேற்று அதிகாலை 4 மணி வரை மகாசிவராத்திரியையொட்டி சுப்ரபாதம் இசைக்கப்பட்டது. மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து பிரம்மோற்சவ விழாவின் 9-வது நாளான நேற்று காலை 7 மணியளவில் புருஷா மிருக வாகனத்தில் சோமஸ்கந்தமூர்த்தி, காமாட்சி தாயார் எழுந்தருளி அருள்பாலித்தனர்.

நேற்று மாலை 5 மணியில் இருந்து இரவு 7 மணி வரை சிவன்-பார்வதி திருக்கல்யாண உற்சவமும், இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை திருச்சி உற்சவமும் நடந்தது. மேற்கண்ட நிகழ்ச்சியில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், குறைந்த எண்ணிக்கையில் முக்கிய வி.ஐ.பி. பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News