செய்திகள்
கோப்புப்படம்

பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றில் வைத்து தைக்கப்பட்ட பஞ்சு பொட்டலம்

Published On 2020-11-28 04:35 GMT   |   Update On 2020-11-28 04:35 GMT
கேரளாவில் அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்தின் போது பெண்ணின் வயிற்றில் வைத்து தைக்கப்பட்ட பஞ்சு பொட்டலம் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
திருவனந்தபுரம்:

திருவனந்தபுரம் வலியதுறையை சேர்ந்தவர் அல்பினா அலி (வயது 22). இவர் கடந்த சில தினங்களுக்கு முன் பிரசவத்திற்காக திருவனந்தபுரம் தைக்காட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை மூலம், பெண் குழந்தை பிறந்தது. சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அல்பினா அலிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டது.

மேலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் இருந்து நீர் வடிய தொடங்கியது. இதனால் அவதிப்பட்ட அல்பினா அலி மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவரது வயிற்றில் பஞ்சு பொட்டலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பிரசவ அறுவை சிகிச்சையின் போது தவறுதலாக பஞ்சு பொட்டலத்தை வைத்து தைத்திருப்பது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து அந்த பெண்ணுக்கு இரண்டாவதாக அவசர அறுவை சிகிச்சை செய்து வயிற்றில் இருந்த பஞ்சு பொட்டலத்தை நீக்கினர். தற்போது அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட அந்த இளம்பெண் தைக்காடு அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்களின் அலட்சியம் குறித்தும், இதனால் தனக்கு நேர்ந்த கொடுமையான அனுபவம் குறித்தும் முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கும், சுகாதார துறை மந்திரி சைலஜாவுக்கும் புகார் அனுப்பினார். இந்த புகார் குறித்து விளக்கம் அளிக்க மருத்துவமனை சூப்பிரண்டுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News