ஆன்மிகம்
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி

வேதாரண்யேஸ்வரர் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி

Published On 2020-09-03 06:41 GMT   |   Update On 2020-09-03 06:41 GMT
அரசு தளர்வு அளித்ததை தொடர்ந்து வேதாரண்யேஸ்வரர் கோவில் நடை திறக்கப்பட்டு சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் பழமை வாய்ந்த சிவன் தலங்களில் ஒன்றாகும். இந்த கோவில் வேதங்கள் பூஜித்த தலமாகும். கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூடப்பட்டு, பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

கோவிலுக்குள் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் அரசு தளர்வு அளித்ததை தொடர்ந்து வேதாரண்யேஸ்வரர் கோவில் நடை திறக்கப்பட்டு சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கீழகோபுரவாசல் வழியாக கோவிலுக்குள் செல்ல பக்தர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலசன்னதி கோபுரவாசல் திறக்கப்படவில்லை.
Tags:    

Similar News