ஆன்மிகம்
ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ விரதமும்... அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன்களும்...
ஒவ்வொரு கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கும், சில குறிப்பிட்ட பிரச்சினைகளை தீர்க்கும் சக்தி உண்டு. அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை வரும் பிரதோஷ விரதம் கடைபிடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.
சூரியனின் ஆதிக்கம் நிறைந்த நாள், ஞாயிறு. இதனால் ஞாயிற்றுக்கிழமையில் வரும் பிரதோஷமும் மிகவும் உன்னதமானதாக கருதப்படுகிறது. பிரதோஷ நேரமான மாலை 4.30 முதல் 6 மணி வரையானது, ஞாயிற்றுக்கிழமையன்று ராகுகாலத்தில் வரும். இதனாலும் ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம் சக்தி வாய்ந்ததாக உள்ளது.
எனவே, ராகுகாலமும் பிரதோஷ வேளையும் இணைந்திருக்கும் நேரத்தில், நாம் சிவாலயத்துக்குச் சென்று அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு, சிவ தரிசனம் செய்வது, கூடுதல் பலன்களைத் தரும். இந்தக்கிழமையில் பிரதோஷ வழிபாடு செய்வதன் மூலம், சிம்ம லக்னம் மற்றும் சிம்ம ராசியினருக்கும், சூரிய தசை - புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக ரீதியான தோஷம் நீங்கும். சூரிய தோஷம், ராகு-கேது தோஷம், கிரகண தோஷம் அகலும். தந்தை - மகன் உறவில் சுமுகம் ஏற்படும்.
இருதயம், வலது கண் தொடர்பான பிரச்சினைகள் விலகும். அரசு உத்தியோக முயற்சியில் வெற்றி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பதவியில் உள்ள பிரச்சினைகள் அகன்று பதவி நிலைக்கும். கூடுதல் பலன் கிடைக்க, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைக்கலாம்.
எனவே, ராகுகாலமும் பிரதோஷ வேளையும் இணைந்திருக்கும் நேரத்தில், நாம் சிவாலயத்துக்குச் சென்று அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு, சிவ தரிசனம் செய்வது, கூடுதல் பலன்களைத் தரும். இந்தக்கிழமையில் பிரதோஷ வழிபாடு செய்வதன் மூலம், சிம்ம லக்னம் மற்றும் சிம்ம ராசியினருக்கும், சூரிய தசை - புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக ரீதியான தோஷம் நீங்கும். சூரிய தோஷம், ராகு-கேது தோஷம், கிரகண தோஷம் அகலும். தந்தை - மகன் உறவில் சுமுகம் ஏற்படும்.
இருதயம், வலது கண் தொடர்பான பிரச்சினைகள் விலகும். அரசு உத்தியோக முயற்சியில் வெற்றி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பதவியில் உள்ள பிரச்சினைகள் அகன்று பதவி நிலைக்கும். கூடுதல் பலன் கிடைக்க, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைக்கலாம்.