செய்திகள்
14 கி.மீட்டர் வேகத்தில் நகரும் நிவர் புயல், கடலூரை நெருங்குகிறது
14 கி.மீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் நிவர் புயல் கடலூரில் இருந்து 80 கி.மீட்டர் தூரத்தில் நிலைகொண்டுள்ளது.
அதிதீவிர புயலாக கரையை கடக்க இருக்கும் நிவர் புயல் 16 கி.மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வந்தது. அதன்பின் வேகம் 13 கி.மீட்டராக குறைந்தது.
தற்போது இரவு 8.30 நிலவரப்படி புயல் நகர்ந்து வரும் வேகம் 14 கி.மீட்டராக அதிகரித்துள்ளது. கடலூரில் இருந்து 80 கி.மீட்டர் தொலைவிலும், புதுவையில் இருந்து 85 கி.மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 160 கி.மீட்டர் தெலைவிலும் நிவர் புயல் நிலைகொண்டுள்ளது.