செய்திகள்
கோப்புபடம்

பாபநாசம் அருகே குடும்பத் தகராறில் பெண் தற்கொலை

Published On 2021-09-09 13:53 GMT   |   Update On 2021-09-09 13:53 GMT
பாபநாசம் அருகே குடும்பத் தகராறில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்,

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள திருப்பாலத்துறையை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி அனுப்பிரியா(வயது42). இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளன

இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மன உளைச்சலில் இருந்த அனுப்பிரியா கடந்த 2ம் தேதி வீட்டில் எலி பேஸ்ட் மருந்தை சாப்பிட்டு விட்டு கதறி அழுதுள்ளார். அதனை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் விக்னேஸ்வரன் (வயது22) கொடுத்த புகாரின் பேரில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News