செய்திகள்
கைது

கற்பழிப்பு வழக்கில் 19 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகள் கைது

Published On 2021-10-27 15:29 GMT   |   Update On 2021-10-27 15:29 GMT
ஜம்மு காஷ்மீரில் பெண்ணைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த இரண்டு நபர்கள் 19 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜம்மு:

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் கடந்த 2002ம் ஆண்டு ஒரு பெண்ணை கடத்தி, தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக அப்துல்  ரஷித், மக்னா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் தலைமறைவானார்கள். 

இந்நிலையில், குற்றவாளிகள் இருவரும் மகோர் தாலுகா மியான் கரியான் பகுதியில் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து எஸ்.எஸ்.பி. சைலேந்தர் சிங் தலைமையிலான போலீசார் இன்று அப்பகுதிக்கு சென்று குற்றவாளிகளை கைது செய்தனர். 

கடந்த 6 மாதங்களில் மட்டும் தலைமறைவு குற்றவாளிகள் மற்றும் தண்டனை பெற்ற குற்றவாளிகள் சுமார் 100 கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News