செய்திகள்
மூதாட்டி பலி

கொடைரோடு அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி பலி

Published On 2021-10-11 13:46 GMT   |   Update On 2021-10-11 13:46 GMT
கொடைரோடு அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
கொடைரோடு:

கொடைரோடு அருகே உள்ள காமலாபுரம் கிழக்கு தோட்ட பகுதியை சேர்ந்தவர் சவரி அம்மாள் (வயது 85). இவர் நேற்று அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் தண்ணீர் எடுப்பதற்கு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் அவர் தவறி விழுந்து இறந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் ஆத்தூர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து சவரி அம்மாளின் உடலை மீட்டனர். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுத்தையா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News