உள்ளூர் செய்திகள்
செங்கம் காஞ்சியில் விவசாய மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் முதலமைச்சர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

சேத்துப்பட்டு, செங்கத்தில் மின் இணைப்பு பெற்ற விவசாயிகளிடம் காணொளி காட்சியில் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடியாடல்

Published On 2022-04-17 08:45 GMT   |   Update On 2022-04-17 08:45 GMT
சேத்துப்பட்டு, செங்கத்தில் மின் இணைப்பு பெற்ற விவசாயிகளிடம் காணொளி காட்சியில் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடியாடினார்.
சேத்துப்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கெங்கைசூடாமணி கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சேத்துப்பட்டு மின்சாரவாரிய கோட்டம் சார்பில் ஓராண்டில் 1 லட்சம் விவசாய மின் இணைப்பு பெற்றவர்களிடம் தமிழக முதலமைச்சர் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. 

நிகழ்ச்சிக்கு சேத்துப்பட்டு மின்சார வாரிய கோட்ட செயற்பொறியாளர் ரவிச்சந்திரபாபு தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர்கள் பக்தவத்சலம், ரமேஷ்பாபு, எழிலரசி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் சிறப்பு அழைப் பாளராக சேத்துப்பட்டு பேரூராட்சி மன்ற தலைவர் சுதாமுருகன், கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

சேத்துப்பட்டு 851 மின் இணைப்பு பெற்ற விவசாய பயனாளிகள் கலந்து கொண்டு காணொலி காட்சி மூலம் கலந்துரை யாடினார்கள். இதில் சேத்துப்பட்டு ஒன்றியக்குழு துணைத்தலைவர் முருகையன், ஒன்றிய திமுக செயலாளர் எழில்மாறன், சேத்துப்பட்டு பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், உதவி மின் பொறியாளர்கள், மின்சார வாரிய ஊழியர்கள், விவசாயிகள், பொதுமக்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

செங்கம் அடுத்துள்ள கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட காஞ்சியில் முதல்வரின் 1 லட்சம் விவசாய மின் இணைப்பு பெற்றவர்கள் உடனான கலந்துரையாடல் விழா தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் விவசாய மின் இணைப்பு பெற்ற பயனாளிகளுடன் மின்திரை வாயிலாக முதலமைச்சர் சிறப்புரையாற்றினார். 

இதனைத்தொடர்ந்து மின் இணைப்பு பெற்ற பயனாளிகளுக்கு மின் இணைப்புக்கான பயனாளர் அட்டைகளை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் வழங்கினார். புதுப்பாளையம் ஒன்றியக் குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன், மாவட்ட கவுன்சிலர் மனோகரன், ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், உதவி செயற்பொறியாளர்கள் மூர்த்தி (புதுப்பாளையம்), சண்முகம் (காஞ்சி) உள்பட மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News