செய்திகள்
கோப்புபடம்.

குன்னத்தூர், இச்சிப்பட்டி, பல்லடத்தில் நாளை மின்தடை

Published On 2021-09-23 09:05 GMT   |   Update On 2021-09-23 09:05 GMT
இச்சிப்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை இச்சிப்பட்டி பகுதியில் மின்சாரம் இருக்காது.
குன்னத்தூர்:

குன்னத்தூர், 16 வேலம்பாளையம், குறிச்சி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை 24 - ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு - பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை குன்னத்தூர், ஆதியூர், தளபதி, வெள்ளிரவெளி, நவக்காடு, சின்னியம்பாளையம், கணபதிபாளையம், வேலம்பாளையம், செட்டிக்குட்டை, குறிச்சி, தண்ணீர்பந்தல் பாளையம், கம்மாளக்குட்டை, எடையபாளையம், சொக்கனூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்வினியோகம் தடை செய்யப்படும். 

இத்தகவலை பெருந்துறை மின்சார வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

இதேபோல் இச்சிப்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை இச்சிப்பட்டி, சின்ன அய்யன்கோவில் பெருமாகவுண்டம்பாளையம் பிரிவு, தேவராயன்பாளையம், கோபம்பக்காடு, கோம்பக்காடுபுதூர், கள்ளப்பாளையம், கருகம்பாளையம், பெத்தாம்பூச்சிபாளையம், செந்தேவிபாளையம், குமாரபாளையம், கொத்துமுட்டிபாளையம், கோடங்கிபாளையம், சின்னகோடங்கிபாளையம் மற்றும் சாமளாபுரம் பகுதியில் உள்ள சூரியாநகர் மற்றும் ராம்நகர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும் என்று சோமனூர் மின்சாரம் வாரிய செயற்பொறியாளர் எஸ்.செந்தில்குமார் தெரிவித்துள்ளார். 

இதேபோல் பல்லடம் நாரணாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பல்லடம் மங்கலம் ரோடு, தெற்குபாளையம், நாரணாபுரம், கல்லம்பாளையம், சேடபாளையம், அறிவொளி நகர், ஆறுமுத்தாம்பாளையம், சேகாம்பாளையம், இந்திராநகர், வெட்டுபட்டான் குட்டை, 63வேலம்பாளையம், வலையபாளையம் பகுதிகளில் மின் தடை ஏற்படும். 

இந்த தகவலை பல்லடம் மின்சார வாரிய செயற்பொறியாளர் கோபால் தெரிவித்துள்ளார்.

இதேபோல் பல்லடம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 10 மணி முதல், மதியம் 1 மணி வரை, பல்லடம் நகரம், வடுகபாளையம், சித்தம்பலம், வெங்கிட்டாபுரம், பனப்பாளையம், மாதப்பூர், ராசாகவுண்டன்பாளையம், ராயர்பாளையம், அனுப்பட்டி, அம்மாபாளையம் ஆகிய ஊர்களில் மின்வினியோகம் தடைசெய்யப்படும். 

இத்தகவலை பல்லடம் வட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் கோபால் அறிவித்துள்ளார். 
Tags:    

Similar News