ஆன்மிகம்
உலகம்மன் கோவில்

நெல்லை தச்சநல்லூர் உலகம்மன் கோவிலில் திருமாலை பூஜை இன்று நடக்கிறது

Published On 2021-02-09 05:34 GMT   |   Update On 2021-02-09 05:34 GMT
நெல்லை தச்சநல்லூர் உலகம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான திருமாலை பூஜை இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பெண்கள் கலந்து கொள்கிறார்கள்.
நெல்லை தச்சநல்லூர் உலகம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருமாலை பூஜை நடைபெறும். இந்த ஆண்டுக்கான பூஜை இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி காலை 8 மணிக்கு தச்சநல்லூர் வரம் தரும் பெருமாள் கோவிலில் இருந்து பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பெண்கள் கலந்து கொள்கிறார்கள்.

பால்குட ஊர்வலம் உலகம்மன் கோவிலில் சென்று அடைகிறது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திருமாலை பூஜை நடக்கிறது. மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. மதியம் 2 மணிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. மாலை 6 மணிக்கு அனைத்து தெருக்களிலும் வீட்டு வாசலில் பொங்கலிடும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு அம்மன் வீதி உலா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை உலகம்மன் பக்த சேவா குழுவினர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News