செய்திகள்
எடப்பாடி பழனிசாமி- ஓ பன்னீர்செல்வம்.

விக்கிரவாண்டி-நாங்குநேரி தொகுதியில் எடப்பாடி பழனிசாமி-ஓ.பி.எஸ். பிரசார சுற்றுப்பயணம்

Published On 2019-10-13 11:44 GMT   |   Update On 2019-10-13 11:44 GMT
விக்கிரவாண்டி-நாங்குநேரி தொகுதிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தேர்தல் பிரசாரம் செய்யும் சுற்றுப் பயண தேதி திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்யும் சுற்றுப் பயண தேதி திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்றும், நாளையும் நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ரெட்டியார் பட்டி நாராயணனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

16,17 தேதிகளில் விக்கிரவாண்டி தொகுதிக்கு சென்று முத்தமிழ் செல்வனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார். 18-ந்தேதி மீண்டும் நாங்குநேரி தொகுதிக்கு சென்று பிரசாரம் செய்கிறார்.

அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் விக்கிரவாண்டியில் இன்று பிரசாரம் செய்கிறார். நாளை (14-ந்தேதி) மற்றும் 18-ந்தேதியும் விக்கிரவாண்டியில் பிரசாரம் செய்கிறார். நாங்குநேரியில் 15, 16, 17 ஆகிய தேதிகளில் பிரசாரம் செய்கிறார்.
Tags:    

Similar News