லைஃப்ஸ்டைல்
ஜவ்வரிசி அடை

புரதம் நிறைந்த ஜவ்வரிசி அடை

Published On 2021-01-25 05:22 GMT   |   Update On 2021-01-25 05:22 GMT
ஜவ்வரிசியில் அதிக அளவிலான புரதம் இருப்பதால், தசைகளை வலுவூட்டவும் செல்களைப் புதுப்பிக்கவும் ரத்த ஓட்டத்தை சீராக்கவும் செய்கிறது. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.
தேவையான பொருட்கள் :

ஜவ்வரிசி - ஒரு கப்,
பொட்டுக்கடலை - அரை கப் (மாவாக அரைக்கவும்),
அரிசி மாவு, கேரட் துருவல் - தலா அரை கப்,
வெங்காயம் - 4,
இஞ்சி, பச்சை மிளகாய் - தேவையான அளவு,
தேங்காய் துருவல் - தேவைக்கு
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

இஞ்சி, ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஜவ்வரிசியை முதல் நாள் ஊற வைத்து, மறுநாள் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியுடன், பொட்டுக்கடலை, அரிசி மாவு, கேரட் துருவல், வெங்காயம், இஞ்சி, ப.மிளகாய், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கொட்டிய பிசைந்து வைக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடை போல மெல்லியதாக தட்டி, சுற்றிலும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக எடுக்கவும்.

இதை வெல்லம் அல்லது ஏதாவது ஒரு சட்னியுடன் சாப்பிடலாம்.

- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News