செய்திகள்
திருவண்ணமலைக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இலங்கை அகதி விபத்தில் பலி
மதுரை மாவட்டம், மேலூரை அடுத்துள்ள கொட்டாம்பட்டி நாகமங்கலம் நான்குவழிச் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இலங்கை அகதி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலூர்:
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அருகே தென்பள்ளிப்பட்டு கிராமத்தில் அகதிகள் முகாமை சேர்ந்தவர் சுஜித் குமார். இவரது மகன் டெலக்சன் (வயது 21)
பெயிண்டரான இவரும் அதே பகுதியை சேர்ந்த நண்பர் சூர்யாவும் மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு மோட்டார் சைக்கிளில் பெயிண்டிங் வேலைக்கு வந்தனர்.
வேலையை முடித்துவிட்டு 2பேரும் நேற்று மாலை திருவண்ணாமலை அகதிகள் முகாமிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
மதுரை மாவட்டம், மேலூரை அடுத்துள்ள கொட்டாம்பட்டி நாகமங்கலம் நான்குவழிச் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட டெலக்சன் பரிதாபமாக இறந்து விட்டார். அவரது நண்பர் சூர்யா லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் பத்மநாபன் வழக்குப்பதிவு செய்து மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை வலைவீசி தேடி வருகிறார்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அருகே தென்பள்ளிப்பட்டு கிராமத்தில் அகதிகள் முகாமை சேர்ந்தவர் சுஜித் குமார். இவரது மகன் டெலக்சன் (வயது 21)
பெயிண்டரான இவரும் அதே பகுதியை சேர்ந்த நண்பர் சூர்யாவும் மோட்டார் சைக்கிளில் மதுரைக்கு மோட்டார் சைக்கிளில் பெயிண்டிங் வேலைக்கு வந்தனர்.
வேலையை முடித்துவிட்டு 2பேரும் நேற்று மாலை திருவண்ணாமலை அகதிகள் முகாமிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
மதுரை மாவட்டம், மேலூரை அடுத்துள்ள கொட்டாம்பட்டி நாகமங்கலம் நான்குவழிச் சாலையில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட டெலக்சன் பரிதாபமாக இறந்து விட்டார். அவரது நண்பர் சூர்யா லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் பத்மநாபன் வழக்குப்பதிவு செய்து மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை வலைவீசி தேடி வருகிறார்.