செய்திகள்
மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 3,081 பேருக்கு கொரோனா தொற்று: 50 பேர் பலி
மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று புதிதாக 3,081 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் 2,342 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இந்தியாவிலேயே கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் தற்போது தினந்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இன்று அம்மாநிலத்தில் புதிதாக 3,081 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19,90,759 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 2,342 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18,86,469 ஆக உயர்ந்துள்ளது. இன்று 50 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50,738 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது வரை 50,738 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.