செய்திகள்
கொரோனா வைரஸ்

புதுக்கோட்டையில் 20 பேருக்கு கொரோனா

Published On 2021-09-11 11:49 GMT   |   Update On 2021-09-11 11:49 GMT
புதுக்கோட்டையில் 20 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை நேற்று புதிதாக 20 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 38 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 222 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 394 ஆக உள்ளது.
Tags:    

Similar News