செய்திகள்
விபத்து பலி

திண்டுக்கல் அருகே விபத்தில் ஒருவர் பலி

Published On 2020-11-28 14:26 GMT   |   Update On 2020-11-28 14:26 GMT
திண்டுக்கல் அருகே விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் அருகே குள்ளனம்பட்டி காவேரி நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 39). இவர் நேற்று காலை நொச்சிஓடைப்பட்டி அருகே நத்தம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற வாகனம் ஒன்று முருகன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே முருகன் பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த சாணார்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News