உள்ளூர் செய்திகள்
கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2022-04-15 08:33 GMT   |   Update On 2022-04-15 08:33 GMT
தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்ட--தாலும், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணையில் குவிந்தனர்.
கோபி:

தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டதாலும், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணையில் குவிந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் சுற்றுலா தலங்களில் ஒன்றான கொடிவேரி அணையில் தண்ணீர் அருவி போல் கொட்டுவதால் பண்டிகை காலங்கள்,

விடுமுறை நாட்களில், ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல் உள்பட மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்,

இந்த நிலையில் தமிழ் புத்தாண்டு, புனிதவெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டதாலும்,

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்ப-டுவதாலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணையில் குவிந்தனர்.
 
அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் அருவி போல் கொட்டும் தண்ணீரில் உற்சாகமாக குளித்தும், தங்கள் குழந்தைகளுடன் செல்பி எடுத்தும், பரிசல் பயணம் மேற்கொண்டும் மகிழ்ந்தனர்,

தொடர்ந்து மாலை நேரத்தில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டதால் அணையின் மேல்பகுதியில் உள்ள மணல் மீது அமர்ந்து வேடிக்கை பார்த்தும்,அங்கு விற்கப்படும் மீன்களை வாங்கி உண்டும் சுற்றுலாப்பயணிகள்  மகிழ்ந்தனர்.

Tags:    

Similar News