தொழில்நுட்பம்
இந்தியாவில் வாட்ஸ்அப் பயனர் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை புதிய உச்சத்தை கடந்திருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் மாதாந்திர பயனர்கள் எண்ணிக்கை 40 கோடியை கடந்தது. தற்சமயம் ஒவ்வொரு மாதமும் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 40 கோடியை கடந்ததாக வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக 2017 ஆம் ஆண்டில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 20 கோடியை கடந்ததாக அறிவிக்கப்பட்டது. அடுத்த மூன்று ஆண்டுகளில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 100 கோடியை கடந்துவிடும் என நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் கண்ட் தெரிவித்தார்.
சமீபத்தில் சிஸ்கோ நடத்திய ஆய்வில் 2022 ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவில் சுாமர் 80 கோடி பேர் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கவுன்ட்டர்பாயிண்ட் ஆய்வின் படி இந்தியாவில் தற்சமயம் ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் எண்ணிக்கை 45 கோடியாக இருக்கிறது. இது 2022 ஆம் ஆண்டில் 70 கோடியாக அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவில் தனக்கென சொந்தமாக பேமன்ட் சேவையை துவங்க இருக்கிறது. இதற்கான சோதனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வரும் நிலையில், அரசு அனுமதி கிடைத்ததும் சேவை விரிவாக துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.