ஆன்மிகம்
கல்லக்குடியில் கோதண்டராமர் கோவிலில் பவித்ரோற்சவ விழா

கல்லக்குடியில் கோதண்டராமர் கோவிலில் பவித்ரோற்சவ விழா

Published On 2021-11-01 04:58 GMT   |   Update On 2021-11-01 04:58 GMT
கல்லக்குடி கோதண்டராமர் கோவிலில் பவித்ரோற்சவ விழா கடந்த 4 நாட்களாக நடைபெற்றது. விழா நாட்களில் அனைத்து சாமிகளுக்கும் பவித்ரம் சாற்றப்பட்டு 360 ஆராதனைகள், வேத, திவ்ய பிரபந்த, பாராயணம் நித்ய பூர்ணாஹுதி நடைபெற்றது.
கல்லக்குடி டால்மியா சிமெண்ட் ஆலை குடியிருப்பு வளாகத்தில் கோதண்டராமர் கோவில் உள்ளது. இங்கு பவித்ரோற்சவ விழா கடந்த 4 நாட்களாக நடைபெற்றது. விழா நாட்களில் அனைத்து சாமிகளுக்கும் பவித்ரம் சாற்றப்பட்டு 360 ஆராதனைகள், வேத, திவ்ய பிரபந்த, பாராயணம் நித்ய பூர்ணாஹுதி நடைபெற்றது.

4-வது நாளான நேற்று ஸ்ரீரங்கம் பவுண்டகரீகபுரம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் ஸ்ரீமத் சீனிவாச கோபால மகாதேசிகன் சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசி வழங்கினா்.விழாவில் ஆலை நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News