செய்திகள்

தஞ்சையில் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு

Published On 2018-03-10 12:53 GMT   |   Update On 2018-03-10 12:53 GMT
தஞ்சையில் வீட்டில் முன்பக்க கதவை உடைத்து 10 பவுன் நகையை கொள்ளையர்கள் திருடி சென்று விட்டனர்.

தஞ்சாவூர்:

தஞ்சை நாஞ்சிக்கோட்டை போஸ்டல் காலனி 3-வது தெருவில் வசிப்பவர் பரசுராமன் (வயது 78). ஓய்வு பெற்ற பத்திர பதிவாளர். இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். 

இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் நேற்று இரவு வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து 10 பவுன் நகையை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இதுபற்றிய புகாரின் பேரில் தமிழ் பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

Tags:    

Similar News