செய்திகள்
பருவமழை

கனமழை எதிரொலி - சென்னை உள்பட 21 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை

Published On 2021-11-26 22:24 GMT   |   Update On 2021-11-27 01:04 GMT
தமிழகத்தில் கனமழை தொடர்வதால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. 

குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் அதிக கனமழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகாலை தொடங்கிய மழை பிற்பகலில் கனமழையாகவும், அதன் பின்னர் அதிகன மழையாகவும் கொட்டித் தீர்த்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. இதேபோல், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலுர், சேலம், தூத்துக்குடி, நெல்லை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருச்சி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 21 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். 

Tags:    

Similar News