செய்திகள்
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா - பலி எண்ணிக்கை 230 ஆக உயர்வு
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. பலி எண்ணிக்கை 230 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர்:
மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 73 ஆயிரத்து 511 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,459 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது.
16,145 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் நேற்று மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,468 ஆக உயர்ந்துள்ளது. 1,825 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. 84 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை. 1,587 பேருக்கு மருத்துவ சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் 1,800-க்கும் மேற்பட்டோருக்கு சோதனை முடிவுகள் அறிவிக்கப்படாத நிலை உள்ளது.
தொடர்ந்து பரிசோதனை முடிவுகள் தாமதமாகும் நிலையே இருந்து வருகிறது. நேற்று மேலும் ஒருவர் கொரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ள நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 230 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 3 லட்சத்து 73 ஆயிரத்து 511 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 16,459 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது.
16,145 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் நேற்று மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 16,468 ஆக உயர்ந்துள்ளது. 1,825 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. 84 பேர் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வீடுகளில் யாரும் தனிமைப்படுத்தப்படவில்லை. 1,587 பேருக்கு மருத்துவ சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் 1,800-க்கும் மேற்பட்டோருக்கு சோதனை முடிவுகள் அறிவிக்கப்படாத நிலை உள்ளது.
தொடர்ந்து பரிசோதனை முடிவுகள் தாமதமாகும் நிலையே இருந்து வருகிறது. நேற்று மேலும் ஒருவர் கொரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ள நிலையில் பலியானவர்களின் எண்ணிக்கை 230 ஆக உயர்ந்துள்ளது.