செய்திகள்
கார் விபத்து

பேருந்து- கார் மோதிய விபத்தில் ஐந்து பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம்

Published On 2021-09-15 14:04 GMT   |   Update On 2021-09-15 14:04 GMT
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பேருந்து மோதிய விபத்தில் கார் தீப்பிடித்து அதில் இருந்த ஐந்து பேர் கருகி உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இன்று காலை முர்பந்தா பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் கார் மீது பேருந்து மோதியுள்ளது. இந்த விபத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதனால் காரில் இருந்து ஐந்து பேரும் தப்ப முடியாமல் தீயில் கருகி உயிரிழந்தனர்.

படுகாயம் அடைந்த பேருந்து டிரைவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tags:    

Similar News