கிறித்தவம்
புனித லூர்து அன்னை

தூத்துக்குடியில் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா

Published On 2022-02-15 02:49 GMT   |   Update On 2022-02-15 02:49 GMT
லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஆன்டனி ப்ரூனோ தலைமையில், மறைமாவட்ட முன்னாள் முதன்மை குரு செல்வராஜ், நூற்றாண்டு விழாக்குழு தலைவர் ஜேம்ஸ் விக்டர் ஆகியோர் திருவிழா திருப்பலியை நடத்தினர்.
தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் திருப்பலி, ஜெபமாலை நடந்தன. புனித லூர்து அன்னையின் திருவிழா திருப்பலி நடந்தது. பங்குத்தந்தை ஆன்டனி ப்ரூனோ தலைமையில், மறைமாவட்ட முன்னாள் முதன்மை குரு செல்வராஜ், நூற்றாண்டு விழாக்குழு தலைவர் ஜேம்ஸ் விக்டர் ஆகியோர் திருவிழா திருப்பலியை நடத்தினர்.

தொடர்ந்து சிறுவர், சிறுமிகள் புதுநன்மை விருந்தும், மாலையில் ஜெபமாலை, திவ்ய நற்கருணை ஆசீர் நடந்தது. விழாவில் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News