செய்திகள்
கைது

அந்தியூரில் ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது

Published On 2021-06-16 08:54 GMT   |   Update On 2021-06-16 08:54 GMT
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ஆசை வார்த்தை கூறி 16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பவானி:

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ஒரு தனியார் நூல் மில் இயங்கி வருகிறது. இதில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த சந்தோஷ் என்ற வாலிபர் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

அப்போது சந்தோஷ் தான் வேலை பார்த்த மில்லில் பணியாற்றி வந்த 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறினார். இதையடுத்து கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு அந்த சிறுமியை திருப்பத்தூருக்கு கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் தனது மகளை காணவில்லை என்று பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதையடுத்து சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்த வாலிபர் சந்தோஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

பின்னர் ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News