செய்திகள்
கலெக்டர் அலுவலகத்தில் பெண் உண்ணாவிரதம்
மகனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் பெண் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
கரூர்:
கரூர் ராயனூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரா (வயது 41). இவரது மகன் நாகராஜ். இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. தனது மகனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், அதன்மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறியும், மகனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று சந்திரா உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து உண்ணாவிரதத்தை கைவிட்டார். இதனை தொடர்ந்து அவரை விசாரணைக்காக தாந்தோணிமலை போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.
கரூர் ராயனூர் பகுதியை சேர்ந்தவர் சந்திரா (வயது 41). இவரது மகன் நாகராஜ். இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. தனது மகனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததாகவும், அதன்மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறியும், மகனை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று சந்திரா உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து உண்ணாவிரதத்தை கைவிட்டார். இதனை தொடர்ந்து அவரை விசாரணைக்காக தாந்தோணிமலை போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.